சர்வதேச மகளர் தினத்தை கொண்டாடும் வகையில் அறம் அறக்கட்டளை ராபர்ட் பாஸ் நிறுவனத்துடன் இணைந்து ரங்கனாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் 8 மாணவிகளை கோவையில் உள்ள ராபர்ட் பாஸ் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே அவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு சாதகமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கம்போஸ்ட் உருவாக்குவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்தும், அதை தேர்ந்தெடுப்பது குறித்தும் அலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அறம் அறக்கட்டளையின் கார்த்திக் மற்றும் ஆனந்த் அழகர் ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.