கோவை கோட்டைமேடு நல்லாயன் துவக்க பள்ளியில் மாணவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.



கோவை: கோட்டைமேடு நல்லாயன் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, மாணவ தலைவராக சஜ்ஜாத் முஜாஹித் 184 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவராக ஹிஸாம் அஸ்லம் 182 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பள்ளி உணவு தலைவராக ஜெரோம் ரையான் 133 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

பள்ளி விளையாட்டு தலைவராக இம்ரான் 173 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பள்ளி சுற்றுச்சூழல் தலைவராக முகமது பாரிஸ் 119 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர் விமல் வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.



மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இதனிடையே வெற்றி பெற்ற மாணவர்களை சக மாணவர்கள் தூக்கி கொண்டாடினர்.

இதனை அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற மாணவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...