கோவை கோட்டைமேடு நல்லாயன் துவக்க பள்ளியில் மாணவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.



கோவை: கோட்டைமேடு நல்லாயன் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, மாணவ தலைவராக சஜ்ஜாத் முஜாஹித் 184 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவராக ஹிஸாம் அஸ்லம் 182 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பள்ளி உணவு தலைவராக ஜெரோம் ரையான் 133 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

பள்ளி விளையாட்டு தலைவராக இம்ரான் 173 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பள்ளி சுற்றுச்சூழல் தலைவராக முகமது பாரிஸ் 119 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர் விமல் வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.



மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இதனிடையே வெற்றி பெற்ற மாணவர்களை சக மாணவர்கள் தூக்கி கொண்டாடினர்.

இதனை அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற மாணவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...