சூலூரில் கஞ்சா விற்பனை - வடமாநில தொழிலாளி கைது!

சூலூர் அடுத்த காங்கேயம்பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பீகார் மாநிலம் முசாபர் பூர் பகுதியை சேர்ந்த சிவ்குமார் சகானி என்பவரை கைது செய்து, சூலூர் போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: சூலூர் அடுத்த காங்கேயம் பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளி ஒருவரை சூலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் முசாபர் பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சகானி என்பவரது மகன் சிவ்குமார் சகானி (35). இவர் தற்போது காங்கேயம் பாளையம் மெத்தை வீடு வீதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஏழு வருடங்களாக காங்கேயம் பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் காங்கேயம் பாளையத்தில் சிவ்குமார் சஹானி கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் காங்கேயம் பாளையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிவ்குமார் சகானி காங்கேயம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.



அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை மறைவிடத்திலிருந்து பறிமுதல் செய்தனர்.



இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமார் சகானியை கைது செய்தனர். மேலும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...