பன்னிமடை அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ!

துடியலூர் அடுத்த பன்னிமடை அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த 21 மாணவர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ தியாகி வெ.எல்லமநாயுடு பொதுநல அறக்கட்டளை சார்பில் 10ஆம் ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.



கோவை: பன்னிமடை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை அரசு மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ தியாகி. வெ.எல்லமநாயுடு பொது நல அறக்கட்டளை சார்பில் 10ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார். அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசந்திரமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஓன்றிய கவுன்சிலர், அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஆர்.வி.சி. என்.நடராஜன் அறிமுக உரையாற்றினார்.

முன்னாள் தலைமை ஆசிரியர் கவிஞர் இரவீந்திரன் விழாப் பேரூரையாற்றினார்.



சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் முதல் இடங்களை பெற்ற 21 மாணவ, மாணவிகளுக்கு சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கி மாணவர்களை பாராட்டி பேசினார்.



மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.



அறக்கட்டளை கெளரவ தலைவர் முத்துகுமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ், முன்னாள் அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், அறாக்கட்டளை கெளரவ ஆலோசகர் செல்லப்பன் ஆகியோர் காமராஜர் மற்றும் எல்லமநாயுடு திருவுருவ படங்களை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அறக்கட்டளை பொருளாளர் ராமச்சந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்த விழாவில் அறக்கட்டளை குழுவினை சேர்ந்த அறக்கட்டளை செயலாளர்கள் பேரூர் நாகராஜ், அசோக்குமார், ராமசாமி, கணுவாய் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாரதிசெல்வம், அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பழனிச்சாமி, சின்னு ராமகிருஷ்ண, துரைசாமி என்கிற வெங்கிடசாமி, பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் நர்மதா துரைசாமி, பன்னிமடை ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம்.மருதாசலம், துணைத்தலைவர் அருள்குமார், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, பி.டி.மோகன்ராஜ், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், துரைசாமி, சுரேஷ்குமார், முன்னாள் துணைத்தலைவர்கள் ராஜப்பன், தாமோதரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் காளியப்பன், நிர்வாகிகள் சம்பத், மயில்சாமி, எத்திராஜ், சுந்தர்ராஜ், சுரேந்திரன், ராமச்சந்திரன், மருதாசலம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மயில்ராணி, துணை தலைவர் லட்சுமி, அரசு ஆரம்ப பள்ளி பி.டி.ஏ தலைவர் டி.பி.ராஜேந்திரன், கவுன்சிலர் கோபாலசாமி உட்பட கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...