சூலூர் அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்த தாய், மகன் கைது!

சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பூவாத்தாள் மற்றும் அவரது மகன் குமாரசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வந்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சூலூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, அங்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் சீல் உடைக்கப்பட்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட பாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



அதை தொடர்ந்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்ததாக அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பூவாத்தாள் மற்றும் அவரது மகன் குமாசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்களிடமிருந்து 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...