பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் 4000 கி.மீ. பிரச்சார பயணம்!

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது, கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 4000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே துவங்கப்பட்டது.


கோவை: ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 4000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் துவங்கப்பட்டுள்ளது.



அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கும் நடவடிக்கை, கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நடவடிக்கை, கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



மேலும், மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்ய வேண்டும். மக்கள் சேமிப்பை மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...