உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை - மாவட்ட ஆட்சியர் உறுதி!

உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்த நிலையில், இன்னும் 3 மாதத்தில் மலைக்கிராமங்களை இணைக்க சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

உடுமலை வன குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உடல்நலம் குன்றியதால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் அவரை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க கடந்த வாரம் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. சாலை அமைக்க டென்டர் கோரப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் சாலை வசதி செய்து தரப்படும். மேலும் இந்த பகுதி தவிர்த்து மற்ற மலை கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பழனிச்சாமி குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...