கோவையில் உள்ள தங்கக்கட்டி விற்பனையகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

கோவை தர்மராஜா கோவில் வீதியில் செயல்பட்டு வரும் 2 தங்கக்கட்டி விற்பனை நிலையங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் சரியாக இருந்ததன் காரணமாக சோதனையை முடித்துக் கொண்டு திரும்பி சென்றதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் தர்மராஜா கோவில் வீதியில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மொத்தம் 50 தங்க கட்டி விற்பனையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தங்கக் கட்டிகள் வியாபாரம் செய்யும் இருவரது அலுவலகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது, மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. சட்டத்துக்கு புறம்பான தகவல்களோ பொருட்களோ இல்லை என்ற காரணத்தால் அதிகாரிகள் ஆய்வை நிறைவு செய்து புறப்பட்டு சென்றதாக தங்கக்கட்டி வியாபாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...