பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோர மின்கம்பங்களை அகற்றாமல் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்!

பல்லடம் - தாராபுரம் இடையேயான சாலை விரிவாக்க திட்டத்தில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் பணிகள் நடைபெற்று வருவதால் பேரிடர் காலங்களில் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொதுமக்கள், மின்கம்பங்களை அகற்றிவிட்டு சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கத் திட்டத்தில் சாலையோர மின் கம்பங்களை அகற்றிவிட்டு கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யும் பணி பல்வேறு நிறுவனங்களால் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்க பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே, சாலையோரங்களில் ஏற்கனவே மின்வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த ரோட்டோர மின்கம்பங்களை கவனிக்காமல் சாலை விரிவாக பணியின் போது ரோட்டோரம் மின் கம்பங்களை அப்படியே நடுவில் வைத்து இருபுறமும் கழிவுநீர் சாக்கடை செல்லும் கால்வாயானது அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இது குறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறியதாவது, மழை, சூறாவளி காற்று போன்ற பேரிடர் காலங்களில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியின் போது சாக்கடை கழிவுநீர் வாய்க்காலின் நடுப்பகுதியில் வைத்துள்ளதால் ரோட்டோர மின்கம்பங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் உடைமைகளை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக நகராட்சியும், மாநில நெடுஞ்சாலை துறையினரும், மின்சார வாரியமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள சாக்கடை கால்வாய் நடுவில் உள்ள ரோட்டோர மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...