நூற்பாலைகள், ஜவுளி தொழில் பாதிப்பு குறித்து தொழில் அமைப்புகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை!

தமிழக நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் குறித்து தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஜவுளி மற்றும் நூற்பாலை தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து கோவையை சேர்ந்த ஜவுளி தொழில் மற்றும் நூற்பாலை தொழில் அமைப்புகளுடன் தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,

1. ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தித்துறை சம்பந்தமான, குறிப்பாக மத்திய நிதி அமைச்சகம் சம்பந்தமான கோரிக்கைகளை, தரவுகளுடன், இந்த ஆண்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி நிலையையும் கணக்கில் கொண்டு, ஒரு நிதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அளிக்கலாம்.

2.மற்ற மாநில நூற்பாலைகள் மிக நவீன இயந்திரங்களை அந்தந்த அரசுக்களின் சலுகைகளை பயன்படுத்தி நிறுவி உள்ளதால், அவர்களது உற்பத்தி செலவு நம்மை விட குறைந்து உள்ளதால் நூல் ஏற்றுமதி சந்தையில் தமிழக நூற்பாலைகளால் போட்டியிட இயலாத நிலை உள்ளது.

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் பயன்படுத்தும் அத்தகைய தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு தமிழக நூற்பாலைகளை தயார்படுத்தும் வகையில் சிறப்பு நிதி உதவித் திட்டத்தை தமிழக அரசு ஆலோசித்து செய்லபடுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...