உடுமலையில் 72 வயது மூதாட்டிக்கு தொடை எலும்பு மாற்று சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை!

கன்ரோஸ் சார்கோமா என்ற ஒரு வகை எலும்பு புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த உடுமலையை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டி நடைபயிற்சி மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் தகவல்.



திருப்பூர்: உடுமலை அருகே 72 வயது மூதாட்டிக்கு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 72 வயது . மூதாட்டி கன்ரோஸ் சார்கோமா என்ற ஒரு வகை எலும்பு புற்று நோயினால் சில வருடங்கள் பாதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனைகளில் கீமோ தெரபி சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டார்.



அப்போது கோவை மருத்துவர்கள் கால் எடுக்க வேண்டும் என தெரிவித்த நிலையில் அவரது உறவினர்கள் ஆலோசனை செய்து உடுமலையில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.மோகன்ராஜை சந்தித்து அவருடைய மருத்துவ ஆலோசனை படி மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவர் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



இதுபோன்ற கடினமான அறுவை சிகிச்சைகள் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் உடுமலை மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை மருத்துவர் குழு, தலைமை மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.மோகன்ராஜ் தலைமையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மூதாட்டி நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...