உடுமலையில் ஆசிய ஹாக்கி கோப்பை அறிமுகம் - அமைச்சர்கள் பங்கேற்பு!

உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழாவில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் 7வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை மற்றும் லோகோ அறிமுக விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்பனா ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஏழாவது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி கோப்பை அறிமுக விழா மற்றும் ஏழாவது ஆசிய ஹாக்கி போட்டியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.



பின்னர் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர் மாணவர்களின் சீர்மிகு அணிவகுப்பு செய்து காண்பிக்கபட்டது.



இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லட்சுமணன், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டல தலைவர் இலா.பத்மநாபன் மற்றும் திருப்பூர் மாவட்ட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...