சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் கோவை லாஜிஸ்டிக் பெடரேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசனை!

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் அலுவலக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், ரயில்வேயில் உள்ள சரக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


கோவை: தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் இருந்து இருந்து தினசரி, 170க்கும் மேற்பட்ட தனி லாரிகள் நூற்பு நூல், 20 டிரக்குகள் ஜவுளி இயந்திரங்கள், 75 லாரிகளில் இன்ஜினியரிங் உதிரிபாகங்கள், 10 லாரிகளில் வார்ப்பு பொருட்கள் என மேலும் பல பொருட்கள் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இது தவிர ஏற்றுமதி சரக்கு, கோயம்புத்தூரில் இருந்து பல வகையான சரக்குகள் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களில் (Containers) பல துறைமுகங்களுக்கு செல்கின்றன.



தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் அலுவலக நிர்வாகிகளுடன் கோவை ரயில் நிலையத்தில் அவர்களை சந்தித்தார்.



அதற்கு பிறகு கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம், CODISSIA, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம், SIEMA, கோடிசியா பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின், CDIIC இயக்குநர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார்.

ரயில்வேயில் உள்ள சரக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது மற்றும் செலவு, நேரம் மற்றும் வசதிக்கான நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.



போக்குவரத்து இழப்பு, காப்பீடு, பொருட்களின் பாதுகாப்பு, கையாளுதல், வேகன்களில் ஏற்றுதல் மற்றும் இறக்குவதில் உள்ள சவால்கள் விவாதத்தின் ஒரு பகுதியாகும். கூட்டத்தின் போது ரயில்வே அதிகாரிகளால் பல்வேறு அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டது.

அனைத்து கருத்துக்களையும் பெற்ற பிறகு, ரயில்வே அதிகாரிகள் பத்து நாட்களுக்குள் சாத்தியமான தீர்வுகளை மறுபரிசீலனை செய்வார்கள் மற்றும் கோயம்புத்தூரில் சரக்கு வணிகத்தை பெற மீண்டும் குழுவை சந்திப்பார்கள்.



அவரை கோயம்புத்தூரில் உள்ள Cointec மையத்தில் CODISSIA தலைவர் & அலுவலக நிர்வாகிகள் அவரை கௌரவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...