கோவையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல் - மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது!

மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் 9 பேர் வெற்றி பெற்றனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, கோவை‌ மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத்‌ தேர்தல்‌ இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ மாமன்ற‌ கூடத்தில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த மறைமுக தேர்தலில்‌ வார்டு எண்‌.7, 9, 17, 38, 39, 43, 44, 47, 48, 56, 74, 75, 78, 85, 86, 90, 91, 95, 96, 97, 98 மற்றும்‌ 99 ஆகிய 22 மாமன்ற உறுப்பினர்கள்‌ தவிர 78 மாமன்ற உறுப்பினர்கள்‌ வருகை புரிந்தனர்‌. வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு 10 மாமன்ற உறுப்பினர்கள்‌ வேட்பு மனு தாக்கல்‌ செய்தனர்‌.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள்‌ பதவிக்கு போட்டியிட்ட 10 வேட்பாளர்களில்‌

வார்டு எண் 1 - ஆர்.கற்பகம்

வார்டு எண் 37 - குமுதம்

வார்டு எண் 69 - சரவணக்குமார்

வார்டு எண் 41 - கே.சாந்தி

வார்டு எண் 83 - வி.சுமா

வார்டு எண் 58 - சுமித்ரா

வார்டு எண் 45 - பேபிசுதா

வார்டு எண் 6 - பொன்னுசாமி

வார்டு எண் 76 - ராஜ்குமார்

ஆகிய 9 வேட்பாளர்கள்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்‌.



எனவே, வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில்‌ அதிக வாக்குகள்‌ பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்‌.



இந்நிகழ்வில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌ அவர்கள்‌, மண்டல குழு தலைவர்கள்‌, மாமன்ற உறுப்பின்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...