இது என்னோட மண் ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது - காலா பட பாணியில் போஸ்டர் ஒட்டிய திமுகவினர்!

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை தொடங்கும் நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் காலா பட பாணியில், ‘இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



கோவை: கோவையில் திமுக சார்பில் காலா பட பாணியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் காலா பட பாணியில் திமுக மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனை பார்த்து பேசும் "இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி காலா படத்தில் ரஜினிகாந்த் நாற்காலியில் கருப்பு உடை அணிந்து கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருப்பதை போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்று போஸ்டரில் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.



மேலும் இந்த போஸ்டரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் கோவை கோட்டைமேடு உக்கடம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "என் மண் என் மக்கள்" என்ற பயணத்தை இன்று துவங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...