இது என்னோட மண் ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது - காலா பட பாணியில் போஸ்டர் ஒட்டிய திமுகவினர்!

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை தொடங்கும் நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் காலா பட பாணியில், ‘இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



கோவை: கோவையில் திமுக சார்பில் காலா பட பாணியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் காலா பட பாணியில் திமுக மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனை பார்த்து பேசும் "இது என்னோட மண், ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி காலா படத்தில் ரஜினிகாந்த் நாற்காலியில் கருப்பு உடை அணிந்து கால் மீது கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருப்பதை போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்று போஸ்டரில் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.



மேலும் இந்த போஸ்டரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் கோவை கோட்டைமேடு உக்கடம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "என் மண் என் மக்கள்" என்ற பயணத்தை இன்று துவங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...