பா.ஜ.க ஆட்சி காலத்திற்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் தகவல்


பா.ஜ.க ஆட்சிக் காலத்திற்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதோ நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் "டாக்டர் ஜி. ஹெல்த் கிளீனிக்" என்னும் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உச்ச நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும், பா.ஜ.க முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளருமான பிங்கி ஆன்ந்தன் கலந்து கொண்டு சிறந்த பெண்களுக்கான விருதுகளை வழங்கினார்.



தொடர்ந்து மகளிர் மேம்பாடு என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் பிங்கி ஆனந்த் சிறப்புரையாற்றினார். இதையடுத்து அம்மருத்துவமனையின் பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் மருத்துவரான கங்காதேவி மகளிர் ஆற்றல் மற்றும் திறன்கள் குறித்து உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிங்கி ஆனந்த், மத்தியில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி செய்து வந்தாலும், ராஜிய சபாவில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தான் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா  நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.



பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த மசோதா நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சிக் காலத்திற்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பெண்கள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இதனை தடுப்பதற்கான போதிய சட்டங்கள் இருப்பதாகவும், தற்போதைக்கு சமூக சீர்திருத்தமே தேவை எனவும் கூறினார்.

இதேபோல் பிரகாஷ் சிங் வழக்கு மூலம் கொண்டு வரப்பட்ட காவல்துறை சீர்திருத்த சட்டத்தை அந்தந்த மாநிலங்கள்  அமல்படுத்துவது அவசியம் எனவும் பிங்கி ஆனந்த் வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...