தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நல திட்ட பணிகளை தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர்.
தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி, மண் சாலையை தார் சாலையாக அமைத்தல், மாநில நிதி ஆணையம் நகர்புற சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் வெள்ளகோவில் சாலையில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக செல்லும் பழுதடைந்து உள்ள தார் சாலையை 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துதல், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வெள்ளக்கோவில் வழியாக எரச்சப்பாடி செல்லும் பழுதடைந்த தார் சாலையை 43.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலையை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்து வரும் முகாம்களை ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்சியில், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் ஜெகஜோதி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.