தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைத்த அமைச்சர்கள்!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நல திட்ட பணிகளை தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர்.

தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



அதன்படி, மண் சாலையை தார் சாலையாக அமைத்தல், மாநில நிதி ஆணையம் நகர்புற சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் வெள்ளகோவில் சாலையில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக செல்லும் பழுதடைந்து உள்ள தார் சாலையை 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துதல், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வெள்ளக்கோவில் வழியாக எரச்சப்பாடி செல்லும் பழுதடைந்த தார் சாலையை 43.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலையை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



மேலும் தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்து வரும் முகாம்களை ஆய்வு செய்தனர்.



இந்நிகழ்சியில், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் ஜெகஜோதி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...