தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைத்த அமைச்சர்கள்!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நல திட்ட பணிகளை தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.3 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர்.

தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



அதன்படி, மண் சாலையை தார் சாலையாக அமைத்தல், மாநில நிதி ஆணையம் நகர்புற சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் வெள்ளகோவில் சாலையில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக செல்லும் பழுதடைந்து உள்ள தார் சாலையை 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துதல், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வெள்ளக்கோவில் வழியாக எரச்சப்பாடி செல்லும் பழுதடைந்த தார் சாலையை 43.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலையை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



மேலும் தமிழ் நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்து வரும் முகாம்களை ஆய்வு செய்தனர்.



இந்நிகழ்சியில், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் ஜெகஜோதி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...