நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து நச்சு புகை வெளியேற்றம் - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!

பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் செயல்பட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பல்லடம் அடுத்த 63.வேலம்பாளையம் அருகேயுள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.



இந்த தார் தயாரிக்கும் தொழில்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் மனு அளித்துள்ளனர்.



இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் தார் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் இந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்கிற அதிர்ச்சி தகவலையும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தற்போது வெளியாகியிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் வெறும் நடிப்பிற்காக தானா? என கேள்வி எழுப்பினர்.

நச்சு புகையை வெளியேற்றும் தார் தொழிற்சாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...