டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் பங்கேற்ற கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன்!

கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, டெல்லியில் உள்ள கியூபா நாட்டின் தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர்.நடராஜன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.


கோவை: டெல்லியில் நடைபெற்ற கியூபா நாட்டின் புரட்சி தின விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூக்கின் அருகில் இருந்து கொண்டு சோசலிச செம்பதாகையை உயர்த்திப் பிடித்து வரும் தேசம் கியூபா . கொரானா பெருந்தொற்றின் போது 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது மருத்துவ குழுவை அனுப்பி சேவை ஆற்றிய நாடு.

தரமான கல்வி, தனிச்சிறப்பு மிக்க மருத்துவம் ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கி வரும் நாடு கியூபா. அத்தகைய சிறப்பு பெற்ற கியூபா நாட்டின் புரட்சி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு இன்று புதுடெல்லியில் இந்தியாவிற்கான கியூபா தூதரகம் புரட்சி தின விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். இந்தியாவிற்கான கியூபா தூதர் அலெக்சாண்டரோ சிமன்காஸ் மாரீன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை இந்திய மக்களின் சார்பாக தெரிவித்தோடு, கியூபா நாட்டின் மீதான இந்திய மக்களின் நேசம் என்றென்றும் தொடரும் என்றும் தெரிவித்தேன்.



பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கியூபா புரட்சி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் தோழர் சே குவேரா தலைமையில் நடைபெற்ற மகத்தான கியூப புரட்சி குறித்தும், அது கியூப சமூகத்தில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...