பாரதியார் பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டமாகிய பறையாட்டக் கலை

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாது பறை கலையாட்டம். அழிவின் விழிம்பில் உள்ள இக்கலையாட்டத்தை மீட்டெடுக்க வேண்டி பல்வேறு தமிழ் அமைப்பினர், நாடகக் கலைஞர்கள் பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். மேலும், அதனை தமிழ் கல்லூரிகளில் பாடத்திட்டமாக்க வேண்டும் என்னும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அத்தகைய கோரிக்கைகளின் வெற்றியாக தற்போது பறையாட்டக் கலை பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேரூர் தமிழ்க்கல்லூரியில் வளர்சீர் கயிலை சமுதாயக் கல்லூரியின் வழியே பறையாட்டக்கலை பட்டய படிப்பிற்கான வடிவம் தற்போது பெறப்பட்டுள்ளது.

தமிழுக்க என தனியொரு கல்லூரியில் பறைக்கென ஒரு பாடத்திட்டம் உருவாகியிருப்பது  அனைத்து பறை கலைஞர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பறை பயிற்சி பட்டறைக்கும், பறை இசைப்பள்ளிக்குமான இடமளித்து ஊக்கமளித்து தமிழும், கலையும் நிறைந்திருக்கும் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் கு.ந.தங்கராசு மற்றும் ஆசிரியர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இப்பறையாட்டக் கலை பட்டய சான்றிதழ் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் வழங்கப்படும். இதில் சேர 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் நகல் மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் பாரதியார் பல்கலைக் கழகத்தினை அனுக வேண்டும். இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9659277222, 9944952893 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...