தமிழகத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை நபர் - அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என எழுந்த சர்ச்சை!

இலங்கையை சேர்ந்த பிரதாபன் தர்மலிங்கம் (47) என்ற நபர் தமிழகத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அரசின் முக்கிய இடங்கள் வழியாக பயணிக்க உரிய அனுமதி பெறப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.



திருப்பூர்: மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வவுண்யா பகுதியை சேர்தவர் பிரதாபன் தர்மலிங்கம் (47). இலங்கை பிரஜையான இவர் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி 3 மாத விசாவில் இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளார்.



இந்நிலையில் இந்த மாதம் ஜூலை 23ஆம் தேதி சென்னையில் இருந்து சைக்கிளில் பயணத்தை துவங்கிய பிரதாபன் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், சேலம் வழியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்தடைந்தார்.

பின்னர் பல்லடம் அரசுக்கல்லூரியில் மரம் நட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாபன்,



இலங்கையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி பின்னர் பணியில் இருந்து விலகினேன், இன்னும் திருமணம் ஆகவில்லை. 38 நாட்களில் 38 மாவட்டங்களில் மரம் நடுவதன் அவசியம் குறித்து சுமார் 3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறேன்

தற்போது பல்லடத்தில் இருந்து சூலூர் வழியாக கோவை சென்று நீலகிரி மாவட்டத்தை அடைந்து பின்னர், அங்கிருந்து மதுரை, கன்னியாகுமரி சென்று பின்னர் சென்னை சென்று பயணத்தை முடிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையை சேர்ந்த பிரதாபன் மேற்கொண்டிருக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் முறையாக அனுமதியோ, தகவலோ தெரிவிக்காமல் மேற்கொண்டிருப்பது உளவுத்துறை கண்காணிக்க தவறியதோ? என்கிற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களை வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தினாலும் பயணத்திற்கான செலவுகள் அனைத்தும் நண்பர்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறுகிறார்.

சூலூர் போன்ற விமான படை தளங்கள் அமைந்திருக்கும் பகுதியை கடந்து செல்வது மற்றும் வெடி மருந்து தொழில்சாலை அமைந்துள்ள அரவங்காடு, ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ள வெலிங்டன் பகுதியை கடந்து செல்ல போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் இல்லையா?.

மேலும் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இலங்கையை சேர்ந்த பிரதாபனின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?. பயணத்தை மேற்கொள்ளும் பிரதாபன் அரசுத்துறை சார்ந்த அலுவலக வளாகங்களில் எவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு நாடு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்வதில் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் தான் உள்ளது. ஆனால் பிரதாபன் போன்ற வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் போது அனுமதி பெற்று நடத்தினால் தான் அதன் பயன் பொதுமக்களை சென்றடையும்.

இந்நிலையில் பிரதாபனின் சைக்கிள் பயணத்தை உளவுத்துறை கண்காணித்து பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை உறுதி செய்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் ஜனாதிபதி நீலகிரி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் கருதப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...