இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

வீரபாண்டி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜனின் ஓட்டுனர் எனக்கூறி இலவச வீட்டு மனை பட்டா பெற்று தருவதாக கூறி சுமார் 14 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.



திருப்பூர்: இலவச வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக கூறி 14 லட்சம் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரிடம் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வீரபாண்டி பகுதி சேர்ந்த சங்கர் என்பவர், தான் பல்லடம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜனிடம் ஓட்டுனராக வேலை செய்வதாகவும் தனக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளை நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

இலவச வீட்டு மனை பட்டா வாங்கித் தருவதற்கு நபர் ஒன்றுக்கு 30,000 கொடுத்தால் உடனடியாக வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சுண்ட மேடு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்த போது, சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஐந்தாயிரம், பத்தாயிரம் என சிறுக சிறுக பணத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இவ்வாறு கடந்த ஆறு மாதத்தில் சுமார் 14 லட்சம் ரூபாய் வசூல் செய்து சங்கரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சங்கர் பணம் கொடுத்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை.



இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி 14 லட்சம் வரை ஏமாற்றிய சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...