கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துக - திருப்பூரில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.



திருப்பூர்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆட்சி பொறுப்பேற்று 90 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திமுக இரண்டரை ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.



மேலும், கோடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...