பார்மசி கல்லூரி அரங்கில் 'சம்பரமா' கலை விழா துவங்கியது


ஊட்டி பார்மசி கல்லூரி அரங்கில் 'சம்பரமா' கலை விழா துவங்கியது. இதில் 'இயல், இசை, நாடக கலையை மாணவ, மாணவியர் பாதுகாத்து, வளர்க்க வேண்டும்' என, கல்லூரி கலை விழாவில் தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி அரங்கில், 'சம்பரமா' என்ற பெயரில் கலை விழா நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் டாக்டர் சின்னசாமி பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவியர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் கலையை பாதுகாக்க, வளர்க்க வேண்டும் என்றார்.



சிறப்பு அழைப்பாளராக, மைசூரு ஜெ.எஸ்.எஸ்., பல்கலை கழக பதிவாளர் டாக்டர் மஞ்சுநாதா பேசினார்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பணிபுரியும் நாளமில்லா சுரபி சார்ந்த மருத்துவ நிபுணர் சுரேஷ் தாமோதரன், கோவை ஜெம் மருத்துவமனை செயல் இயக்குனர் சங்கீதப்பிரியா, சென்னை 'அபெக்ஸ்' லேபாரட்டரி நிறுவன செயல் இயக்குனர் விஷாகன் ஆகியோர் பேசினர்.

இதனைத்தொடர்ந்து, மாணவியர் அபர்ணா, தாமினி, ஜனனி தலைமையிலான மாணவியர் குழுவினர் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். துணை முதல்வர் அப்சப் அசாம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஜெ.எஸ்.எஸ்., பல்கலையின் கீழ் செயல்படும், ஐந்து கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதில், வினாடி- வினா, நடனம், நாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நாளை மதியம் (மார்ச் 11) நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...