ஈஷா யோக மையத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கோரியும், மலைவாழ் மக்களுக்காக போராட்டியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்தும் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி மற்றும் சமூக நீதிக்கட்சியினர் கோவை தெற்கு தாலுக்கா அலுவலலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் சிவஞானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டத்திற்கு புறம்பாக ஈஷா கட்டிடங்களை கட்டியதை உயர் நீதிமன்றமே உறுதி செய்து விட்ட நிலையில் இன்னும் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக ஈஷா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈஷா ஆக்கிரமித்த மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் உபரி நிலத்தை மீட்க எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் போராட்டங்கள் நடத்தினர். தற்போது அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளது.இந்த செயலை கண்டித்து இன்று மாவட்டங்கள் முழுவதும் எங்கள் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இன்று கல்லூரி மாணவர் ஒருவர் ஈஷா வளாகத்தில் உள்ள சூர்ய குண்டத்தில் குளித்ததால் மரணமடைந்துள்ளார். இது குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

சட்டத்திற்கு புறம்பாக ஈஷா கட்டிடங்களை கட்டியதை உயர் நீதிமன்றமே உறுதி செய்து விட்ட நிலையில் இன்னும் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக ஈஷா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈஷா ஆக்கிரமித்த மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் உபரி நிலத்தை மீட்க எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் போராட்டங்கள் நடத்தினர். தற்போது அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளது.இந்த செயலை கண்டித்து இன்று மாவட்டங்கள் முழுவதும் எங்கள் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இன்று கல்லூரி மாணவர் ஒருவர் ஈஷா வளாகத்தில் உள்ள சூர்ய குண்டத்தில் குளித்ததால் மரணமடைந்துள்ளார். இது குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.