முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை அவரது உருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு திமுக கட்சியினர், கலைஞர் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
வால்பாறையில் உள்ள காந்தி சிலை பேருந்து நிலையம் பகுதியில் வைக்கப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
இதில் நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார் திட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.