கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் - வருமானவரித்துறை அறிவிப்பு

கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வருகிற 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்து கொள்ள வேண்டும் எனவும் இந்த தேதி கட்டாயம் நீட்டிக்கப்படாது எனவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவையில் கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார், முதன்மை ஆணையர் திருமலைக்குமார், துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய கிருஷ்ணகுமார், மத்திய அரசு பண மதிப்பிழப்பு அறிவிப்பின் ஒரு கட்டமாக கருப்பு பணத்தை கணக்கில் காட்ட பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் வருகிற மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் கருப்பு பணம் குறித்த தங்கள் தகவல்களை வருமான வரித்துறையில் அளித்து அபராதம் மட்டும் செலுத்தி சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் இருந்து விளக்கு பெறலாம் எனக்கூறிய அவர் இந்த திட்டம் கட்டாயமாக மார்ச் 31க்கு பிறகு நீட்டிக்கப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

கடந்த 2 வாரங்களில் கோவை மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட ஆய்வுகளை செய்துள்ளதாகவும் இதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். கருப்பு பணம் தொடர்பான தகவல்களை அளிக்க சலான் 287ஐ மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...