‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ - கோவையில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்!

அவதூறு வழக்கில் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நேற்று, மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். இதனை கொண்டாடும் விதமாக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு, ‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்ற வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.


கோவை: அவதூறு வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கோவையில் ராகுல் காந்திக்கு நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டரை காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ளனர்.

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து நேற்று ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு சென்றார்.

இதனை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் கோவை மாநகரில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைபடத்தில் இடம்பெற்றுள்ள பிரபல வசனமான " நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், உக்கடம் ஆகிய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...