சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் - மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தகவல்!

கோவையின் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக புதிதாக பொறுப்பெற்றுள்ள பவானீஸ்வரி, சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க எல்லைகள் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



கோவை: சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.



கோவை மேற்கு மண்டலத்திற்கான புதிய காவல்துறை தலைவராக பொறுப்பேற்று கொண்ட ஐஜி பவானீஸ்வரி கோவை பந்தய சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



மேற்கு மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நல்ல முறையில் சிறப்பாக பணி செய்து வருகிறார்கள். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றத்தை எப்படி தடுக்கலாம் என விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.

அதே போல போதை பொருள் புழக்கம் என்பது கண்டிப்பாக பெரிய குற்றம் என்பதால் நிச்சயமாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனை சிறப்பாக செய்ய உள்ளோம். சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்திற்கு புறம்பாக எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக எது நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

போதை பொருள் புழக்கத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வருகிற 11ஆம் தேதி ஆன்டி ட்ரக் நாள் (Anti Drug Day) சம்பந்தமாக அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

அதிகாரிகளிடம் கலந்து பேசி போதைப்பொருள் எந்த வழிகளில் வருகிறதோ அதனை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளேன் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

எல்லை பகுதிகளில் இருந்து எப்படி போதை பொருள் உள்ளே வருகின்றது என்பது குறித்து ஆய்வு செய்து அதனை தடுக்க இன்னமும் எப்படி வலுப்படுத்த முடியுமோ அதனை செய்ய உள்ளோம்.

வட மாநில தொழிலாளர்கள் தென் மாநில தொழிலாளர்கள் என பாகுபாடு பார்க்காமல் யார் குற்றம் செய்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். மேற்கு மண்டலம் அன்பான மக்கள் அவர்களுக்கு அமைதியான முறையில் நல்ல வாழ்க்கை கொடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

பொதுமக்களுக்கு மனுநீதி நாள் போன்றவை நடத்தப்பட்டு அதில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது அவர்களுக்கு என்ன தேவையோ சட்ட ரீதியாக உறுதியாக செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...