வால்பாறையில் உலக பழங்குடியினர் தின விழா - உற்சாகமாக கொண்டாட்டம்!

வால்பாறையில் பழங்குடியின மக்கள் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தின விழா பாரம்பரிய இசையுடன், ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோவை: வால்பாறையில் உலக பழங்குடியினர் தினம் முன்னிட்டு பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையுடன், ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடினர்.

வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு சுமார் 1000க்கும் மேல் மக்கள் உள்ளனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் பழங்குடியினர் மக்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வால்பாறை நகராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் ஒன்று சேர்ந்து இந்த விழாவை நடத்தினர்.

இந்த விழாவில் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



மேலும் வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டார்.



முன்னதாக குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை துவங்கி வைத்தனர்.



இதனையடுத்து, பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை எழுப்பி நடனமாடி, பாட்டுப்பாடி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தேவையான மின்சார வசதி சாலை வசதி மற்றும் அரசாங்கம் வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று பழங்குடி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...