கோவையில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் ஊழல் - பாமக நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக பாமக நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டு திட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆவணங்களுடன் அசோக் ஸ்ரீநிதி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் 32 அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போர்டில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறது.



ஒரு ஸ்மார்ட் போர்டு 2 லட்சம் ரூபாயாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில் அதன் விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் என ஸ்மார்ட் போர்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தெரியவந்தது.

மேலும் இணைய சேவை பராமரிப்பு செலவுகளை கணக்கிட்டாலும் கூட ஒரு ஸ்மார்ட் போர்டுக்கு 50 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது.

அதேசமயம் இத்திட்டத்தில் தொகுதி நிதியை தொகையாக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற முடியாது, ஊரக வளர்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் டெண்டர் பணிகள் மூலம் தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...