திருப்பூரில் கனமழை - பல்லடம் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பரவலாக கன மழை பெய்த நிலையில், கனமழை காரணமாக, திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர்: கனமழை காரணமாக பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை, நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடை பகுதியில், இன்று பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.



மேலும் மழைநீர் வடிந்து செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய்த்தொற்று ஏற்படவும் வாயப்புள்ளதாக கூறிய அப்பகுதிமக்கள் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள மழைநீர் வடிகால் அமைத்து தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...