நிலுவை தொகையை வழங்க கோரி திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், நிலுவை ஊதிய தொகையினை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: நிலுவை ஊதிய தொகையினை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், வெள்ளகோவில், காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் திருமுருகன் பூண்டி உள்ளிட்ட 6 நகராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணி மாற்றம் செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நிலுவை ஊதிய தொகை கூட வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.



உடனடியாக நிலுவை ஊதிய தொகையினை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில் இன்று 6 நகராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...