நிலுவை தொகையை வழங்க கோரி திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், நிலுவை ஊதிய தொகையினை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: நிலுவை ஊதிய தொகையினை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், வெள்ளகோவில், காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் திருமுருகன் பூண்டி உள்ளிட்ட 6 நகராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணி மாற்றம் செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நிலுவை ஊதிய தொகை கூட வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.



உடனடியாக நிலுவை ஊதிய தொகையினை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில் இன்று 6 நகராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...