ஆடி கடைசி வெள்ளியையொட்டி வடமதுரை வி.எஸ்.கே.நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை: வடமதுரை அடுத்த வி.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள விஷ்ணு துர்கை அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோவை வடமதுரை வி.எஸ்.கே. நகர் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம். ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விஷ்ணு துர்கை அம்மனுக்கு ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமைகளில் வி.எஸ்.கே. நகர் சுற்றியுள்ள ஒவ்வொரு நகர் பகுதி மக்கள் சார்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 4வது வெள்ளிக்கிழமையான இன்று கிளாசிக் ரெசிடென்சி பகுதி குடியிருப்போர் சார்பில் அருள்மிகு விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் விஷ்ணு துர்கை அம்மனுக்கு பூக்கள், வளையல்கள் மற்றும் எலுமிச்சை மாலைகளால் அலங்கரித்திருந்தனர்.
அம்மனுக்கு பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.
தொடர்ந்து ஊஞ்சலில் அலங்கரித்திருந்த விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பெண்கள் குழுவினர் அம்மன் பாடல்களை பாடி அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதில் கிளாசிக் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.
அவர்களுக்கு விபூதி பிரசாதங்களுடன், பொங்கல், அபிசேகம், வெஜிடபுள் பிரியாணி, தயிர் சாதம், கூல் உள்ளிட்ட அன்னதானம் வழங்கப்பட்டது.