தடாகம் அருகே பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது!

தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: கோவை தடாகம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடையே போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையில் மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.



மேலும் கணுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடங்கள் நடைபெற்றது.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...