நடிகர் சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

நடிகர் சத்யராஜின் தாய் நாதாம்பாள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: நடிகர் சத்யராஜ் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை உடல் ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ள சூழலில் இன்று காலை அவரது உடலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



அதைத்தொடர்ந்து நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா மற்றும் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா திமுக தலைமை சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் சத்யராஜ் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...