வாளையாறு சோதனை சாவடியில் ஆடையில் மறைத்து வைத்து சுமார் ரூ.25 லட்சம் பணம் கடத்திய நபர் கைது!

தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடி போலீசார் சோதனையின் போது, கேரள அரசு பேருந்தில் வந்த நபர் தனது ஆடையில் சுமார் 25 லட்சம் ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: வாளையாறு சோதனைச் சாவடியில் சுமார் 25 லட்சம் ரூபாயை ஆடையில் மறைத்து வைத்து கொண்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடியில் கேரள மாநில காவல் துறையினர் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள அரசு பேருந்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பேருந்தில் பயணம் செய்த எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்த லட்சுமி நிவாஸ் எஸ்வந்த் (58) என்பவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை சோதனை சாவடி அறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.



அப்போது சட்டை மற்றும் வேட்டிக்குள் பல லட்ச ரூபாயை கட்டு கட்டுகளாக சிறிய பாக்கெட்டுகள் போல தைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.



அவரிடமிருந்து மொத்தம் 24,78,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



மேலும் அவர் எதற்காக பணத்தை எடுத்து வந்தார் என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்வந்த் பணத்தை எடுத்து வந்த போது சோதனை சாவடிகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...