ஈஷா யோக மையத்தில் கல்லூரி மாணவன் ரமேஷ் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்


திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த விவசாயி மன்னர்கண்ணன் என்பவரின் மகன் ரமேஷ்(21), இவர் வேலூர் ஜிடெக் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார். இவர் நேற்று காலை நண்பர்களுடன்

சுற்றுலாவிற்கு வந்து கோவை ஈஷா மையத்திலுள்ள சூரிய குண்டம் குளத்தில் மூழ்கி குளிக்கும்போது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் இறந்து நீண்ட நேரமாகிவிட்டது என தெரிவித்துள்ளனர். 

பின்னர் உடற்கூறு ஆய்விற்காக ரமேஷின் உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்டது. ஈஷா மையத்தில் ஆண்கள் குளிப்பதற்கு சூரிய குண்டமும், பெண்கள் குளிக்க சந்திர குண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குண்டங்களில் பாதரசத்தால் செய்யப்பட்ட லிங்கங்கள் குண்டத்தின் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும். பாதரசம் உடலுக்கு தீங்கிளைக்க கூடியது என ஈஷா மையத்தின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், கல்லூரி மாணவர் ரமேஷ் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் இன்று கோவை வந்துள்ள ரமேஷின் குடும்பத்தினர் தங்களது மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது மகன் ஆரோக்கியமாக இருந்து வந்ததாகவும் அவருக்கு எந்தவிதமான மருத்துவ பிரச்சனைகளும் இதுவரை இருந்ததில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வழிபாட்டு தளம் ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் ஒரு குளத்தில் பாதரச லிங்கம் அமைத்துள்ள நிலையில் அது என்ன மாதிரியான மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தங்கள் மகனின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...