மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் பலி - கோவில் வளாகத்தில் உயிரை விட்டதால் பக்தர்கள் சோகம்

கோவையில் ஆடி மாதத்தையொட்டி கோவில் திருவிழாவின் போது, அன்னதானம் போடுவதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: ஆடி மாத திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை உக்கடம் சி.எம்.சி.காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இன்று விழாவின் ஒரு பகுதியாக அன்னாதானம் நிகழ்ச்சி இன்று மதியம் நடைபெற இருந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்ற இளைஞர் ஒலிப்பெருக்கி மூலம் அன்னதானம் குறித்து தகவல் தெரிவித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒலிப்பெருக்கியில் அதிகப்படியான மின்சாரம் பாய்ந்ததில் கோவில் வளாகத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேந்திரன் மயக்கடைந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.



பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே மகேந்திரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த மகேந்திரன் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாகவும், அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள சூழலில் இன்றைய அன்னதானத்திற்கு அவர் தான் சமையல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அனைத்து பணிகளையும் முன் நின்று செய்த இளைஞர் கோவில் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...