நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் - கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மனு!

நாங்குநேரியில் ஜாதி ரீதியிலான வன்மத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளி மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவ போல், மீண்டும் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க கோரி கோவை ஆட்சியரிடம் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாங்குநேரி சம்பவம் போல் மீண்டும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி ஜாதி ரீதியிலான வன்மத்துடன் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை அகற்றும் வண்ணம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை படிவத்தில் சாதி மத பிரிவு விவரங்கள் பெறுவதை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றிலுமாக அகற்ற வேண்டும். இட ஒதுக்கீடு மற்றும் கல்வி சலுகைகள் ஆகியவை குடும்ப வருவாய் சான்று அடிப்படையில் வழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கைகள் இந்தியன் என்ற ஒரு அடையாளத்தில் வழங்கப்படும் என்ற திட்டத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமும் பள்ளி கல்லூரிகளிலும் அரசு சார்பில் விரைவான சர்வே நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களின் இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...