கார்கள் நின்றிருந்த இடத்தை விட்டு விட்டு தார் சாலை போட்டதால் அதிர்ச்சி - ஒப்பந்ததாரரின் அலட்சியத்திற்கு மக்கள் கண்டனம்

திருப்பூரில் கார்கள் நின்றிருந்ததை அப்புறப்படுத்தாமல் அதை ஒரு சாக்காக காரணம்காட்டி, அந்த இடத்தை விட்டுவிட்டு மற்ற இடங்களில் பெயரளவுக்கு மட்டும் ஒப்பந்ததாரர் சாலை போட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



திருப்பூர்: சில ஆண்டுகளுக்கு ஒரு முறைமட்டுமே சாலை சீரமைக்கப்படுகிறது. அப்பையாவது ஒழுங்காக சாலை போடவேண்டாமா என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழைய தார் சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னி காம்பவுண்ட் வீதியில் தார் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு தார் சாலை சீரமைப்பு பணி நடைபெற்ற நிலையில் இரு வேறு இடங்களில் கார்கள் நின்றிருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தாமல் கார்கள் நின்று கொண்டிருந்த இடத்தை விட்டு விட்டு மற்ற இடங்களில் தார் சாலை போடப்பட்டு உள்ளது.



சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சாலை சீரமைக்கப்படக்கூடிய நிலையில் இது போன்று கார்கள் நிற்பதை காரணம் காட்டி ஒப்பந்ததாரர் இடைவெளி விட்டு விட்டு தார் சாலை போட்டு சென்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...