நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் - சமத்துவத்தை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி!

நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் சமத்துவத்திற்கான மனித சங்கிலி என்ற தலைப்பில் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.




கோவை: நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதலை தொடர்ந்து, கோவையில் அரசு கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி ஜாதி ரீதியிலான வன்மத்துடன் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.



இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமை உணர்வை சமத்துவ சகோதர உணர்வை வளர்த்தெடுக்கும் வண்ணம் கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் சமத்துவத்திற்கான மனித சங்கிலி என்ற தலைப்பில் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.



இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலைக் கல்லூரி வாசல் முன்பு வரிசையாக நின்று சாதி மதம் இனம் மொழி பாலின வேறுபாடு இன்றி வேற்றுமை உணர்வை தகர்க்க வலியுறுத்தினர்.



மேலும் இதில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்த மனித சங்கிலி ஏற்பாடு இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...