நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் - சமத்துவத்தை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் மனிதசங்கிலி!

நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் சமத்துவத்திற்கான மனித சங்கிலி என்ற தலைப்பில் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.




கோவை: நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான ஜாதிவெறி தாக்குதலை தொடர்ந்து, கோவையில் அரசு கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி ஜாதி ரீதியிலான வன்மத்துடன் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.



இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமை உணர்வை சமத்துவ சகோதர உணர்வை வளர்த்தெடுக்கும் வண்ணம் கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் சமத்துவத்திற்கான மனித சங்கிலி என்ற தலைப்பில் மனித சங்கிலியாக நின்று சமத்துவத்தை வலியுறுத்தினர்.



இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலைக் கல்லூரி வாசல் முன்பு வரிசையாக நின்று சாதி மதம் இனம் மொழி பாலின வேறுபாடு இன்றி வேற்றுமை உணர்வை தகர்க்க வலியுறுத்தினர்.



மேலும் இதில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்த மனித சங்கிலி ஏற்பாடு இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...