மாணவர்களுக்கு காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது வருத்தமளிக்கிறது -மரபின் மைந்தன் முத்தையா பேச்சு

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் "கல்லூரி ஆண்டு விழா மற்றும் தமிழ்மன்றம் நிறைவு விழா" இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவிழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு சிறப்புரையற்றினார். 



அவர் பேசுகையில்; மாணவ- மாணவிகள் அமைதியாக இருந்தால் பல அர்த்தங்கள் உள்ளன. அமைதியான மாணவர்கள் ஆழமான சிந்தனை கொண்டவர்கள். கல்லூரி காலங்களில் மாணவர்கள் திறன்களை வளர்க்க வேண்டும். அதேபோன்றே இவர்களின் திறன்களை நிர்வாகமும் அங்கீகரிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளையும், திறன்களையும் பல சாதனைகளை கௌரவம் செய்யும் விழாதான் கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள். கலை மற்றும் அறிவியல் துறைகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். 

அரசு வேலைகளில் மற்றும் அரசியலிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்கள் இன்று பல உயரிய பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு அரசியலில் காமராஜரைப் போல முன்மாதிரிகள் இப்பொழுது இல்லாதது மிகவும் வருதமளிகிறது. தற்போதைய அரசியலில் உயர்ந்த முன்மாதிரிகள் யாரும் இல்லாததால் தவறான வழிக்கு இன்றைய இளைஞர்கள் கொண்டு செல்கின்றனர். நாம் என்ன படிக்கிறோம் என்பதை விட படிப்பினால் எவ்வளவு உயரத்தினை தொடுகிறோம் என்பதே முக்கியம். தோல்விகள், அவமானங்கள், துயரங்கள் மற்றும் கவலைகளை தோலில் சுமந்து கொண்டே இருக்காதீர்கள். இவைகளை தூக்கி எறியுங்கள் எப்பொழுதும் நிபந்தனை இல்லாத நட்பினை வளர்க்க வேண்டும் என்றார்.





இவ்விழாவில், தமிழ்மன்றத்தின் தூரிகை இதழ் சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது. மேலும் இவ்வருடத்தின் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. இதில், கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானக்குமார், துணை முதல்வர் விஜயசாமுண்டேஷ்வரி, தேர்வு கண்காணிப்பாளர் சுனிதா, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...