சுதந்திர தின விழா - பள்ளியில் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ஆட்சியர்

திருப்பூரில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மரியாதை செய்தார். பின்னர் தான் பயின்ற பள்ளியின் ஆசிரியரின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.



திருப்பூர்: சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியதை செலுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக்கல்லூரியில கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.



சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 34,36,633 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தான் படித்த பள்ளியின் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.



திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சுதந்திர தின விழாவில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தந்தையும், குணச்சித்திர நடிகருமான சின்னி ஜெயந்த் கலந்து கொண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...