திருப்பூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
திருப்பூர்: ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மகாலில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் தாமு. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்,
இந்தியா வல்லரசாக ஊழலற்ற நாடாக திகழ இந்து முன்னணி தற்போது பாடுபட்டு வருவதாகவும் கடந்த காலத்தில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தது தொடர்பான நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிய எம்பி திருநாவுக்கரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினத்தில் தான் உடன் இருந்ததாகவும் கூறியதற்கான முரண்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் சிலைகள் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்ததாகவும் ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகும் என்றும் தற்போது கணக்கிட்டு பணி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதனை பிரச்சனை இன்றி மக்கள் அமைதியாக வாழ தீர்வு காணும் முயற்சியில் இந்து முன்னணி தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.