நீதிமன்ற உத்தரவை மீறி கொசினா அமைப்பின் சார்பில் விழா - நிர்வாகிகள் புகார்!

கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) அமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான வழக்கில், அமைப்பின் செயல்பாடுகளுக்கும், அமைப்பின் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், கொசினா சார்பில் நாளைய தினம் விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை தடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நீதிமன்ற உத்தரவை மீறி கொசினா அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள விழாவை தடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கத்தின் (கொசினா) தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 2021ஆம் ஆண்டு கொசினா நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தல் செல்லாது என கோவை மாவட்ட பத்திர பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சங்கத்தின் பெயரை பயன்படுத்தி எந்த செயல்பாடும் செய்யக்கூடாது, விழாக்கள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டது. சங்கத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.

இதனிடையே கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் சங்கம் பெயரை பயன்படுத்தி சிலர் கோவையில் முப்பெரும் விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆர் எஸ் புரம் கலையரங்கத்தில் வரும் 16ம் தேதி விழா நடத்துவதற்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சங்கம் தொடர்பான செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தடையை மீறி சிலர் விழா நடத்த ஏற்பாடு செய்திருப்பது சங்க உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், விழா நடத்த அனுமதிக்க கூடாது என சங்க நிர்வாகத்தின் சார்பில் பத்திரப்பதிவு, கோவை மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...