பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை பணியை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் கேரள அரசு வேகமாக மேற்கொண்டு வருவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தேக்குவட்டை பகுதியில் கேரள அரசு மேற்கொண்டு வந்த தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இதைதொடர்ந்து தேக்குவட்டை பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சக்கண்டி பகுதியிலும் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது. இந்த பகுதியிலும் தடுப்பணை கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மீதமுள்ள பகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டும் பணிகளை துவக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கேரள அரசின் தடுப்பணை கட்டுமான பணிகள் காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுமென தெரிவித்தார். தமிழக அரசின் மெத்தனப்போக்கு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வழக்கு நடத்தாத காரணத்தினால் தான் கேரள அரசு தடுப்பணை பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தடுப்பணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்த்து நாளை க.க.சாவடி பகுதியில் கேரள எல்லையை ஒரு நாள் முழுவதும் மறிக்கும் முற்றுகை போராட்டம் 40 அமைப்புகள் சார்பில் நடைபெற இருப்பதை அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...