சுதந்திர தினம் கொண்டாட்டம் - தனியார் பள்ளி மாணவர்கள் பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா பேரணியை மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலைக்கோவில் என்ற தனியார் பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் காந்தி, நேரு, பாரதியார், சுதந்திர தேவி உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்களை போல வேடம் அணிந்து, மாணவ மாணவியர் மூலனூர் அரசு மருத்துவமனை முன்பு துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வடுகபட்டி பிரிவு அண்ணா நகர் வழியாக பேரணி பள்ளி வளாகம் முன்பு நிறைவடைந்தது.



பள்ளியின் தாளாளர் சுந்தரம் தலைமையில் இந்தநிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின பேரணியை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நெஞ்சன், நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...