தாராபுரம் அருகே கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத ஊராட்சி தலைவர் - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நடைபெற்றது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலை 11 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து காத்திருந்தனர்.



ஆனால் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி திடீரென வரவில்லை என தெரிவித்தார். இதனால் கூட்டம் நடந்த வந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி துறை கல்வித்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

அப்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குறைகளை தெரிவித்தனர். கடந்த இரண்டு கூட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வேண்டும் என்று புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.



ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...