துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ.9.70 லட்சம் மதிப்பில், வடிகால் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை: துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, 11 வது வார்டு ரங்கம்மாள் காலனி, டேங்க் வீதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூபாய் 9.70 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG அருண்குமார் வழிகால் அமைக்கும் பணியினை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் நர்மதா துரைசாமி, துணைத்தலைவர் பூக்கடை ரவிச்சந்திரன், குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, அசோகபுரம் ஊராட்சி துணைதலைவர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் ஜெயப்பிரியா சக்கையன், மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.