துடியலூர் அருகே வடிகால் கட்டும் பணியை தொடங்கி வைத்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ!

துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ.9.70 லட்சம் மதிப்பில், வடிகால் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.



கோவை: துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.



கோவை துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, 11 வது வார்டு ரங்கம்மாள் காலனி, டேங்க் வீதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூபாய் 9.70 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.



இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG அருண்குமார் வழிகால் அமைக்கும் பணியினை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் நர்மதா துரைசாமி, துணைத்தலைவர் பூக்கடை ரவிச்சந்திரன், குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, அசோகபுரம் ஊராட்சி துணைதலைவர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் ஜெயப்பிரியா சக்கையன், மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...